லக்னௌ: விவசாயிகள் போராட்டம், பண்டிகைக் கொண்டாட்டங்கள் காரணமாக, உத்தரப்பிரதேச காவல்துறையினர், தங்களது ஊழியர்களுக்கு அக்டோபர் 18 வரை அனைத்து விடுமுறையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரஷாந்த் குமார் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. கிராமத்துக்காக மலையையே துளையிட்ட இளைஞர்கள்; மகிழ்ச்சியில் கிராம மக்கள்
அதில், பண்டிகைக் காலம் நெருங்கவிருப்பதாலும், விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாகவும், உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினருக்கு அக்டோபர் 18 வரை வழங்கப்பட்டிருக்கும் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எடுக்கப்படும் விடுமுறைகள் மட்டும் தலைமையகம் மூலம் அனுமதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைக் கொண்டாடப்படுவதால், கோயில்கள் பொதுவிடங்களில் மக்கள் கூடுவது அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.