வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அக்.18 வரை அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்த உ.பி. காவல்துறை

விவசாயிகள் போராட்டம், பண்டிகைக் கொண்டாட்டங்கள் காரணமாக, உத்தரப்பிரதேச காவல்துறையினர், தங்களது ஊழியர்களுக்கு அக்டோபர் 18 வரை அனைத்து விடுமுறையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
அக்.18 வரை அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்த உ.பி. காவல்துறை
Updated On :11 அக்டோபர் 2021, 8:07 am

ANI


லக்னௌ: விவசாயிகள் போராட்டம், பண்டிகைக் கொண்டாட்டங்கள் காரணமாக, உத்தரப்பிரதேச காவல்துறையினர், தங்களது ஊழியர்களுக்கு அக்டோபர் 18 வரை அனைத்து விடுமுறையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரஷாந்த் குமார் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், பண்டிகைக் காலம் நெருங்கவிருப்பதாலும், விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாகவும், உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினருக்கு அக்டோபர் 18 வரை வழங்கப்பட்டிருக்கும் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எடுக்கப்படும் விடுமுறைகள் மட்டும் தலைமையகம் மூலம் அனுமதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைக் கொண்டாடப்படுவதால், கோயில்கள் பொதுவிடங்களில் மக்கள் கூடுவது அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.