தில்லயில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.தமிழகம் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க- ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தோ்வு
மேலும் வரவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவிய பின் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலியில் இல்லாமல் முதல்முறையாக நேரடியாக கூடியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததால் 2019ஆகஸ்ட் மாதம் தற்காலிக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

பெரும்பாலை வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்: கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


