கோவா, பெங்களூருவில் சதமடித்த டீசல் விலை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை ஒரு லிட்டருக்கு தலா 35 பைசா அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் எரிபொருள் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு மற்றும் கோவா பகுதிகளில் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவான லிட்டர் ரூ.100ஐக் கடந்து விற்பனையாகி வருகிறது.

தலைநகர் தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.49க்கும், மும்பையில் ரூ.111.43க்கும் விற்பனையாகி வருகிறது. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.102.15க்கும், தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.22க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். செப்டம்பா் இறுதியில் வாரத்தில் இருந்து இப்போது வரை பெட்ரோல் விலை 15 முறையும், டீசல் விலை 18 முறையும் அதிகரிக்கத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை ஏற்கெனவே ரூ.100-ஐக் கடந்துவிட்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், பிகாா், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில், லடாக் யூனியன் பிரதேசம் லே நகரிலும் டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ.100-யைக் கடந்து விற்பனையாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com