ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘அந்தப் பணத்தில்தான் தடுப்பூசி கொடுத்தோம்’: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் பதில்

இந்தியாவில் உயர்த்தப்பட்ட வரிகளின் மூலமே இலவச கரோனா தடுப்பூசி கொடுக்க முடிந்தது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

News image
ஹர்தீப் சிங் புரி
Updated On :23 அக்டோபர் 2021, 12:22 pm

DIN

இந்தியாவில் உயர்த்தப்பட்ட வரிகளின் மூலமே இலவச கரோனா தடுப்பூசி கொடுக்க முடிந்தது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் முறையே லிட்டருக்கு நூறைக் கடந்து விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “சாலைகள் அமைப்பது, ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் போன்ற நாடு முழுவதுக்குமான வளர்ச்சித் திட்டங்களுக்கு வரி வருவாயை சார்ந்திருப்பதால் வரிகளைக் குறைப்பது என்பது சொந்தக் காலையே வெட்டுவதற்கு சமமாகும்” எனத் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் எளிமையாக, “விலைவாசி உயர்ந்துவிட்டது, வரிகளைக் குறைக்கவேண்டும் எனக் கூறும் அரசியல் நடந்துவருகிறது. சர்வதேச எண்ணைய் சந்தை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக உள்ளன" என அமைச்சர் பூரி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கரோனா பேரிடர் காலத்தில் 90 கோடி மக்களுக்கு உணவளித்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின்கீழ் 8 கோடி ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். இவைகளெல்லாம் இந்த வரிகளின் மூலம் செய்துள்ளோம். வரிகளைக் குறைப்பது குறித்து பதிலளிக்க நான் நிதியமைச்சர் அல்ல” என மத்திய அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.