உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 13 பேர் பலி

உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 
accident091515
accident091515

உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 

உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் அருகே சக்ராட்டா தெஹ்சில் பகுதியில் 300 அடி பள்ளத்தில் வாகனம் ஒன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதுவரை 13 பேரின் சடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் 300 அடி பள்ளம் என்பதால் மீட்பு நடவடிக்கையில் கடினம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com