19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவால் தலைநகர் தில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதையும் படிக்க | ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.12 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரிவருவாய்
தில்லியில் செப்டம்பர் மாதத்தின் சராசரி மழையளவு 125.1 மி.மீ. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும் இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் செப்டம்பர் மாதத்தின் 90 சதவிதமான மழையானது புதன்கிழமை ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அசாமில் கரோனா பரவல்: முன்னெச்சரிக்கையாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்
அதிதீவிர மழைப்பொழிவின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


