இந்தியாவில் இதுவரை 66.30 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 81,09,244 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 66,30,37,334(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 25,97,17,695 இரண்டாம் தவணை - 2,98,87,208 |
45 - 59 வயது | முதல் தவணை - 13,33,18,523 இரண்டாம் தவணை - 5,59,07,199 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,80,78,095 இரண்டாம் தவணை - 4,57,07,571 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,59,391 இரண்டாம் தவணை - 84,14,897 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,25,922 இரண்டாம் தவணை - 1,33,20,833 |
மொத்தம் | 66,30,37,334 |