மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,342 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,342 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,73,674ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 55 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,37,551ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று 4,755 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62,81,985ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கரோனா
தற்போதைய நிலவரப்படி 50,607 பேர் சிகிச்சையில் உள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.