இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உத்தரப்பிரதேசத்தில் உச்சம் தொடும் டெங்கு பாதிப்பு

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது அம்மாநில மக்களை கவலை கொள்ள செய்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :15 செப்டம்பர் 2021, 10:43 am

DIN

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது அம்மாநில மக்களை கவலை கொள்ள செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் டெங்குபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதால் தேவையான மருத்துவ வசதிகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

காசியாபாத்தில் மட்டும் செவ்வாய்க்கிழமை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்தது. இதுதொடர்பாக பேசிய மருத்துவர் ராகேஷ் குப்தா 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து டெங்கு நோய் பதிவான சில மணிநேரங்களுக்குள் ஒருங்கிணைந்த மருத்துவக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் கான்பூரில் 103 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கான்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அனில் நிகம்,  “காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 75-யிலிருந்து 100 நோயாளிகள் புறநோயாளிகள் பிரிவுக்கு வருவதாகவும், அவர்களில் 5 முதல் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை டெங்கு நோயாளிகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள்  மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (காசியாபாத்) தலைவர் டாக்டர் ஆஷிஷ் அகர்வால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.