8 மணி நேரமாகக் குறைந்த வேலைநேரம்: மகாராஷ்டிர பெண் காவலர்கள் மகிழ்ச்சி

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணி நேரமாக குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8 மணி நேரமாகக் குறைந்த வேலைநேரம்: மகாராஷ்டிர பெண் காவலர்கள் மகிழ்ச்சி(PIC: Maharastra Police Head quarters)
8 மணி நேரமாகக் குறைந்த வேலைநேரம்: மகாராஷ்டிர பெண் காவலர்கள் மகிழ்ச்சி(PIC: Maharastra Police Head quarters)

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணி நேரமாக குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரங்களின் காவலர்களுக்கான பணிநேரம் 12 மணிநேரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில காவல்துறை தலைவரின் சமீபத்திய அறிவிப்பு பெண் காவலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

12 மணி நேரமாக நீடித்துவரும் பணி நேரத்தால் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட முடிவதில்லை என பெண்காவலர்கள் தெரிவித்துவந்தனர். 
இதனைத் தொடர்ந்து பெண் காவலர்களுக்கான பணிநேரம் 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்படுவதாக காவல்துறை துறை தலைவர் அறிவித்தார்.

நாக்பூர், புணே, அமராவதி மற்றும் நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வேலை நேரம் 8 மணி நேரமாக உள்ள நிலையில் டிஜிபியின் அறிவிப்பு மேலும் இதற்கு வலுசேர்த்துள்ளதாக பெண் காவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com