அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காஷ்மீரில் பாஜக நிர்வாகியை சுட்டு கொன்ற பயங்கரவாதி படுகொலை

வடக்கு காஷ்மீர் பந்திபோராவில் வாட்ரினா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

News image
கோப்புப்படம்
Updated On :26 செப்டம்பர் 2021, 11:39 am

DIN

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாஜக நிர்வாகி வசீம் பாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதில் இவர்களுக்கு தொடர்பு இருப்பததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காஷ்மீர் பந்திபோராவில் வாட்ரினா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்குச்சூடு நடத்தினர். 

இதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இதில், அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்" என்றார். கடந்தாண்டு ஜூலை மாதம், பாஜக மாவட்ட தலைவர் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இவர்களை கொலை செய்த பயங்கரவாதி இன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து, ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.