புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 28,718 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 23,529 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980-ஆக உயா்ந்துள்ளது.
இதையும் படிக்க | வரம்பை மீறும் கல்லூரி மாணவா்கள்! விடியோ பதிவு செய்ய 60 குழுக்கள்
28,718 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,30,14,898 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,77,020-ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97,85 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.82 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 378 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,47,751-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் விகிதம் 1.33 சதவிகிதமாக உள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளத்திலும் தொடர்ந்து பாதிப்பும், பலியும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,161 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88,34,70,578 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 56,89,56,439 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 15,06,254 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.