தெலங்கானாவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சரகொண்டா மண்டலத்தில் உள்ள துர்கலபள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்தது.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கல்வக்குருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியானவர்கள் கவுஸ் கான் (55), சாதிக் (55), ஃபர்ஹானா (45), ரூஷன் (24) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சூரியப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெரேடுசர்லாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு தர்காவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com