சென்னையை அடுத்த நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு காணப்பட்டது.
ஆந்திரம் மாநிலம், திருப்பதி அருகே நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.