கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா மருந்துகளுக்கு 5% ஜிஎஸ்டி; மற்ற மருந்துகளுக்கு 5-12%

கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, நிதித்துறை இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2022, 4:06 pm

கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, நிதித்துறை இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று கரோனா தொற்றுக்கான மருந்துகள் 5 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 66% மருத்துவ காப்பீடு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து மருந்துகளையும் 5 முதக்ல் 12 சதவிகித ஜிஎஸ்டிக்குள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று கரோனா மருந்துகளுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி 18%. 
 
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையில் நிதியமைச்சகம் வழங்கிய அனைத்து சேவைகளுக்கான ஜிஎஸ்டி வசூல் மற்றும் விலக்குகள் அடங்கிய தரவுகள் உள்ளன என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.