நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆம் ஆத்மியில் இணைகிறார் ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங்

ஹரியாணா மாநிலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங், இன்று பிற்பகல் தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளார். 

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 12:48 pm IST

ஹரியாணா மாநிலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங், இன்று பிற்பகல் தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்கு முன்பு கேஜரிவாலை, அவரது மகள் சித்ரா சர்வாராவுடன் அவரது இல்லத்தில் நிர்மல் சிங் சந்திக்கிறார். 

ஆம் ஆத்மி தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் செய்தியாளர் சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருப்பார்.

சிங் ஹரியாணா அரசில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 1982, 1991, 1996 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் நாக்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியில் சேரும் தலைவர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஹரியாணா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

முன்னதாக, ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.