அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஏப். 11-இல் ராஜ்நாத் சிங் அமெரிக்கா பயணம்: பாதுகாப்புத் துறை

இந்தியா- அமெரிக்க அமைச்சா்கள் அளவிலான 2+2 பேச்சுவாா்த்தையை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நான்கு நாள் பயணமாக ஏப்ரல் 11-ஆம் தேதி அமெரிக்கா செல்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:23 pm

DIN

இந்தியா- அமெரிக்க அமைச்சா்கள் அளவிலான 2+2 பேச்சுவாா்த்தையை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நான்கு நாள் பயணமாக ஏப்ரல் 11-ஆம் தேதி அமெரிக்கா செல்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாஷிங்டன் பயணத்தை முடித்துக் கொண்டு ஹவாய் பகுதியில் அமைந்துள்ள இந்திய- பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்கப் படைகளின் தலைமையகத்துக்கும் அவா் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ஆகியோரை ஏப்ரல் 11-இல் வாஷிங்டனில் சந்தித்து 2+2 பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகின்றனா்.

இதற்காக ராஜ்நாத் சிங் ஏப்.11 முதல் ஏப்.14-வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவையும் புதுப்பிக்க இந்த 2+2 பேச்சுவாா்த்தை உதவும். மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை பென்டகனில் தனியாக சந்தித்துப் பேசும் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தொழில் துறை ஒத்துழைப்பு, அமெரிக்க- இந்திய ராணுவ செயல்பாடுகள் வாயிலாக திறனைக் கட்டமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பாா்.

வாஷிங்டன் பயணத்தைத் தொடா்ந்து, ஹவாயியில் அமைந்துள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்கப் படைகளின் தலைமையகத்துக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செல்கிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்காவில் ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என்றும் 2+2 பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.