அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வருவாய் பற்றாக்குறை மானியம்: 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடி விடுவிப்பு

 வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:34 pm

DIN

 வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையேயான மதிப்பீட்டு இடைவெளி அடிப்படையில், 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு வரிப் பகிா்வு மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, தகுதி உள்ள மாநிலங்கள் எவ்வளவு மானியம் பெறலாம் என்பதை 15-ஆவது நிதிக் குழு முடிவு செய்தது.

அதன்படி 2022-23ஆம் நிதியாண்டில் ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.86,201 கோடி மானியம் வழங்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. இதில் முதல் தவணையாக இந்த மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.