/

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: 4 காவலர்கள் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலில் 4 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2022, 8:40 am IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலில் 4 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு போலீஸ் எல்லைக்குள்பட்ட ஜெய்கூர் முகாமில் நேற்று இரவு 11 மணியளவில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

காவல்துறையினர் மீது நடத்திய இந்தத் தாக்குதலில் 4 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த இரு காவலர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் பி. சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.