பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை

ஐந்து மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவையொட்டி அடுத்து வருகின்ற தோ்தல்களை
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவையொட்டி அடுத்து வருகின்ற தோ்தல்களை எதிர்கொள்ள தோ்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோர் அக்கட்சிக்கு கைகொடுக்க முன்வந்துள்ளார்.

வருகின்ற 2024 - ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலுக்களுக்கான உத்திகளுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் கட்சி தலைவா்கள் முன்னிலையில் பிரசாந்த் கிஷோர் முழு வரையறை விளக்கங்களை சனிக்கிழமை அளித்துள்ளார். இதற்கான ஒரு குழுவை அமைக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்துள்ளது.

இந்த நிலையில்,  தில்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.  பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com