மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கேரள சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராஜன் என்.கோப்ரகடேவுக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில், ‘‘கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 5 நாள்களாக கேரள கரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை மாநில அரசு மத்திய அரசிடம் சமா்ப்பிக்கவில்லை. இது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவா்கள், பாதிப்பு விகிதம் ஆகியவற்றை மத்திய அரசு கண்காணிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள கரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை மாநில அரசு புதுப்பித்து தினந்தோறும் மத்திய அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தாா்.