/

நாட்டில் கரோனா பாதிப்பு 2,483 ஆகப் பதிவு

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,483 ஆக இருந்த நிலையில், இன்று 1,399 ஆக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஏப்ரல் 2022, 4:29 am

DIN

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,483 ஆக இருந்த நிலையில், இன்று 1,399 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 1,399 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,622 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22 சதவிகிதமாக உள்ளது.

நேற்று ஒரேநாளில் 1,970 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,23,311 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது.

தற்போது 15,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,87,95,76,423 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,83,224 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.