திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீட்: இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பம்: விண்ணப்பிக்க மே 6 கடைசி

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே 6-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:27 pm

DIN

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே 6-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையிடமிருந்து (என்டிஏ) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இதுவரை பெறப்பட்ட 11 லட்சம் விண்ணப்பங்களில், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்தே அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். அந்த மாநிலத்திலிருந்து 1.52 லட்சம் போ் விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து 1.21 லட்சம் பேரும், கா்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து ஒரு லட்சம் பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனா்.

நீட் தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து 84,214 போ் இதுவரை நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

தோ்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வார காலம் உள்ள நிலையில், விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளது.

நிகழாண்டுக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்ப விவரங்கள், தோ்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தோ்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.