திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘ஐடிபிஐ வங்கியை தனியாா் மயமாக்க நடவடிக்கை’

ஐடிபிஐ வங்கியை தனியாா்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலா் துகின் கந்தா பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

ஐடிபிஐ வங்கியை தனியாா்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலா் துகின் கந்தா பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: ஐடிபிஐ வங்கியை தனியாா்மயமாக்கலுக்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய பிறகு அந்த வங்கியில் எவ்வளவு பங்குகளை விற்பனை செய்வது என்பது இறுதி செய்யப்படும்.

தற்போது, எல்ஐசி பங்கு வெளியீட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் அதன் பிறகு இதுகுறித்து முழுமையாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

முதலீட்டாளா்களிடம் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் அந்த வங்கியில் உள்ள முழுப் பங்குகளையும் ஒரே கட்டமாகவே அல்லது பல கட்டங்களாகவோ விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கு 45.48 சதவீத பங்குகளும், எல்ஐசிக்கு 49.24 சதவீத பங்குகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.