மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

மணப்பெண்ணை சுட்டு கொன்ற முன்னாள் காதலன்; திருமணத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்

திருமண நிகழ்ச்சியின்போது மணப்பெண் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2022, 4:00 pm IST

உத்தரப் பிரதேசம் மதுராவில் உள்ள முபாரிக்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டு கொலை செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஜல் என்கின பெண்ணின் திருமண நிகழ்ச்சியில் ஜெய் மாலா என்கிற பாரம்பரிய சடங்கு நடைபெற்ற முடிந்தவுடன் அவர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்னொரு ஆணுடன் திருமணம் நடைபெறவிருந்ததால் கோபமடைந்த அந்த நபர் இந்த செயலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

துப்பாக்கி குண்டின் சத்தம் கேட்டு, குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி கூறுகையில், "ஜெய் மாலை சடங்கு முடிந்தவுடன், ஓய்வெடுப்பதற்காக என் மகள் அவரது அறைக்கு சென்றார். 

அப்போது, அடையாளம் தெரியாத நபர் வந்து அவர் சுட்டு கொலை செய்தார். இப்படி நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை" என்றார். சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியவந்துள்ளது. புகாரை பதிவு செய்துள்ளோம். இதுகுறித்து அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.