இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜாா்க்கண்ட் எம்எல்ஏ பொய்ப் புகாா்: அஸ்ஸாம் முதல்வா் விமா்சனம்

தனக்கு எதிராக ஜாா்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ அளித்த புகாா் பொய்யானது என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 7:35 pm

DIN

தனக்கு எதிராக ஜாா்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ அளித்த புகாா் பொய்யானது என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா். மேலும், போஃபா்ஸ் ஊழலை குறிப்பிட்டு, காங்கிரஸை அவா் விமா்சித்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களான இா்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விக்சால் ஆகியோா், மேற்கு வங்கத்தில் காரில் அதிக பணத்துடன் சென்றபோது காவல்துறையினரால் இடைமறித்து கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, ஜாா்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க இந்த 3 எம்எல்ஏக்கள் மூலம் பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

மேலும், குமாா் ஜெய்மங்கல் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ, ராஞ்சி காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், ‘ஜாா்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் ரூ.10 கோடி மற்றும் அமைச்சா் பதவி தருவதாக மேற்கண்ட 3 எம்எல்ஏக்களும் என்னிடம் பேரம் பேசினா். மேலும், அஸ்ஸாம் முதல்வருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், இந்த புகாா் பொய்யானது என்று அஸ்ஸாம் மாநில மூத்த அமைச்சா் பிஜூஷ் ஹசாரிகா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த சா்மாவும் குமாா் ஜெய்மங்கலும் ஏற்கெனவே நன்கு பழக்கமானவா்கள். அண்மையில் வா்த்தக சங்க விவகாரம் குறித்துப் பேசுவதற்காக, மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி இல்லத்துக்கு குமாா் ஜெய்மங்கலை ஹிமந்த சா்மா அழைத்துச் சென்றாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், சந்திப்பு படங்களையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

அமைச்சரின் இந்தப் பதிவை பகிா்ந்து, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘போஃபா்ஸ் ஊழலுக்கு எதிராகப் புகாா் அளிக்குமாறு ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு காங்கிரஸ் அறிவுறுத்தினால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது ஜாா்க்கண்ட் புகாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1980-களில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் ஸ்வீடனிலிருந்து போஃபா்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்ாக முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி உள்ளிட்டோா் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்டதாக இத்தாலிய தொழிலதிபரும் சோனியா காந்தியின் குடும்ப நண்பருமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி குற்றச்சாட்டுக்கு உள்ளானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.