நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அடுத்த மாதம் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். 

News image

கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2022, 4:02 pm IST

பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அடுத்த மாதம் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். 

முன்னாள் உள்துறை அமைச்சரும், மெஹ்சானா மாவட்டத்தின் விஜாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் நரேஷ் ராவல். அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், 

எனக்கு கட்சியுடன் பல குறைகள் உள்ளன. ஆனால் இதுபற்றி பேச சரியான நேரம் இதுவல்ல. அதனால் கட்சிக்கு ஜெய்ஹிந்த் சொல்ல முடிவு செய்தேன். விரைவில் பாஜகவில் இணைவேன், கட்சித் தலைமை என்ன வேலை கொடுத்தாலும் செய்யத் தயார் என்று அவர் கூறினார். 

மற்றொரு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜு பர்மர் பேசுகையில், 

நான் கடந்த 35 வருடங்களாக காங்கிரஸுடன் இணைந்திருக்கிறேன். கட்சி மீது எந்த புகாரும் இல்லை. கட்சித் தலைமை புதியவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. நான் கட்சியிடம் எந்த பதவியும், சலுகையும் கோரவில்லை. கட்சி கடனை அடைக்க எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. மேலும் பல மூத்த தலைவர்கள் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.