காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் சாவிக்காக கையை வெட்டியை தந்தை: ரத்த வெள்ளத்தில் இறந்துபோன மகன்

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், மோட்டார்சைக்கிள் சாவிக்காக, தனது மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார் 21 வயது மகன்.

News image

ரத்த வெள்ளத்தில் இறந்துபோன மகன்

Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:33 pm

PTI


தாமோ: மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், மோட்டார்சைக்கிள் சாவிக்காக, தனது மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார் 21 வயது மகன்.

இந்த விவகாரம் வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. மோட்டி பட்டேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம் கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளைய மகனும், பலியான நபருமான சந்தோஷ் படேலிடம் இருசக்கர வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளனர். ஆனால், சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்துவிட்டதால், மோட்டியும் ராமும் சந்தோஷை தாக்கியுள்ளனர்.

ஆத்திரம் தலைக்கேறியதில், மோட்டி, தனது மகனின் கையை ஒரு கட்டை மீது வைத்து, கோடாரியால் வெட்டியதில், கை துண்டானது.

துண்டான கை மற்றும் கோடாரியுடன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் சரணடைந்தார் மோட்டி. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், உடனடியாக போபாய் கிராமத்துக்குச் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தோழை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கும் பிறகு ஜபல்பூரில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரத்த இழப்பால் சந்தோஷ் மரணமடைந்துவிட்டார். இதையடுத்து மோட்டி மற்றும் ராம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.