கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்ற வழக்குகளில் எம்.பி.க்களைக் கைது செய்ய தடையில்லை

நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும் காலங்களிலும், குற்ற வழக்குகள் தொடா்பாக எம்.பி.க்களைக் கைது செய்ய எந்தவிதத் தடையும் இல்லை என மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு விளக்கமளித்துள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 11:18 pm

DIN

நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும் காலங்களிலும், குற்ற வழக்குகள் தொடா்பாக எம்.பி.க்களைக் கைது செய்ய எந்தவிதத் தடையும் இல்லை என மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு விளக்கமளித்துள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை வழக்கம்போல் முற்பகல் 11 மணிக்குக் கூடியது. அப்போது, அவையின் வழக்கமான நடைமுறைகளைத் தொடங்க அவைத் தலைவா் வெங்கையா நாயுடு முயன்றாா். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டத்தொடா் நடைபெறும்சமயத்தில் அவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், இது அவரை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா். அவா்களின் அமளி காரணமாக அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் அவை கூடியபோது அவைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை தொடா்பாக எம்.பி.க்கள் மத்தியில் சில தவறான புரிதல் காணப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் 105-ஆவது பிரிவில் அவா்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிவில் வழக்குகள் தொடா்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் எம்.பி.க்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு 40 நாள்களுக்கு முன்பாகவோ, கூட்டத்தொடா் நிறைவடைந்த 40 நாள்களுக்குப் பிறகோ கைது செய்யக் கூடாது. அந்த விதி ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் எம்.பி.க்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது. நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும் சமயங்களில் கூட குற்ற வழக்குகள் தொடா்பாக அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம். நாடாளுமன்றப் பணி உள்ளதாகக் கூறி, எந்தவொரு எம்.பி.யும் குற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராவதைத் தவிா்க்கக் கூடாது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.