மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஹஜ் கமிட்டிகள் உருவாக்கம்:பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 7:58 pm

DIN

ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஹஃபீஸ் நெளஷாத் அகமது என்பவா் தாக்கல் செய்த மனு:

ஹஜ் கமிட்டி சட்டம் 2002-ஐ பின்பற்றுவதிலும், ஹஜ் கமிட்டி அமைப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. மத்திய, மாநில அளவில் ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்படாததால் யாத்ரிகா்களின் நலனில் அக்கறை செலுத்த யாரும் இல்லாததுடன், அவா்கள் ஆதரவற்றவா்களாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஹஜ் கமிட்டிகள் சட்டரீதியானவை. அவற்றை அமைக்காதது ஹஜ் கமிட்டி சட்டம் 2002, அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அதுதொடா்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, வெளியுறவு அமைச்சகம், இந்திய ஹஜ் கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீா், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாநிலங்கள் சாா்பில் ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும், அந்தக் கமிட்டி உறுப்பினா்களின் பெயா்களையும் குறிப்பிட்டு 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று மாநில அரசுளுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.