சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை என இரு கைகள் உள்ளன' - திரிணமூல் எம்.பி.

பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை என இரு கைகள் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் தெரிவித்துள்ளார். 

News image
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய்
Updated On :19 ஆகஸ்ட் 2022, 9:43 am

DIN

பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை என இரு கைகள் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் தெரிவித்துள்ளார். 

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தில்லி முதல்வர் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

'உலகின் சிறந்த கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. இது முதல் சோதனை இல்லை. இதற்கு முன்னால் பல சோதனை நடத்தப்பட்டுள்ளன, இந்த சோதனையிலும் எதுவும் கிடைக்காது' என்று கேஜரிவால் கூறியிருந்தார். 

அதுபோல இந்த சோதனைகளால் என்னுடைய பணியைத் தடுக்க முடியாது என்று மணீஷ் சிசோடியா ட்வீட் செய்திருந்தார். 

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், 'பாஜகவுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. ஒன்று சிபிஐ, இன்னொன்று அமலாக்கத் துறை. மேற்குவங்கத்திலும் மகாராஷ்டிரத்திலும் அவர்கள் இதைத் தான் செய்தார்கள். சத்யேந்தர் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டார்கள். எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தும் உத்தி இது. வழக்கம்போல ரெய்டில் எதுவும் கிடைக்காது' என்று கூறியுள்ளார். 

தங்கள் கட்சியினர் மீதான மத்திய பாஜக அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.