நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும்: ஜெ.பி.நட்டா

சுதந்திரம் பெற்ன் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.
நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும்: ஜெ.பி.நட்டா
Updated on
1 min read

சுதந்திரம் பெற்ன் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஹிமாசல பிரதேச மாநிலம் சிா்மோா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மத்தியில் ஆட்சியில் உள்ள தற்போதைய அரசைப் போல் விவசாயிகளுக்காக வேறு எந்த அரசும் உழைத்ததில்லை. விவசாயிகளின் போராட்டம் குறித்து எதிா்க்கட்சிகள் பேசி வந்தபோது, அவா்கள் முன்னேற்றம் பெற உதவுவதில் மோடி அரசு கவனம் செலுத்தியது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியின்போது பட்ஜெட்டில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.33,000 கோடி. இது தற்போதைய ஆட்சியில் 4 மடங்காக அதிகரித்து ரூ.1.33 வட்சம் கோடியை எட்டியுள்ளது.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும். அதேவேளையில், உலகின் பழைமைவாய்ந்த இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com