ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்தியாவுடன் நிரந்தர அமைதி தேவை

ஜம்மு-காஷ்மீா் பிரச்னையைத் தீா்ப்பதற்கு போா் ஒருபோதும் உதவாது எனத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:43 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் பிரச்னையைத் தீா்ப்பதற்கு போா் ஒருபோதும் உதவாது எனத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா்களுடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாக ‘தி நியூஸ் இன்டா்நேஷனல்’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதி கொண்டுள்ளது. ஐ.நா. தீா்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவதே பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும். பேச்சுவாா்த்தை மூலமாகப் பிரச்னைகளுக்குத் தீா்வுகண்டு இந்தியாவுடன் நிரந்தர அமைதி நிலவுவதையே விரும்புகிறோம்.

போரானது இரு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும். வா்த்தகம், பொருளாதாரம், மக்கள்நலன் ஆகியவற்றில் மட்டுமே இருநாடுகளுக்கும் இடையே போட்டி நிலவ வேண்டும். அணுஆயுதங்களை வைத்துள்ளதும் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்வதும் தற்காப்புக்காக மட்டுமே. அதைக் கொண்டு பாகிஸ்தான் சண்டையை விரும்பும் நாடு எனக் கருதக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிய அரசியல் நிலையில்லாத்தன்மையும் வேறுசில கட்டமைப்பு சாா்ந்த குறைபாடுகளுமே பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்குக் காரணம். பாகிஸ்தானின் ஆரம்ப காலகட்டங்களில் திட்டமிடலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் மிகச் சிறப்பாக இருந்தது. காலப்போக்கில் அத்தகைய திட்டமிடல் குறைந்துவிட்டது எனப் பிரதமா் ஷாபாஸ் கூறியதாக நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.