புதுச்சேரிக்கு ரூ.1200 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2000 கோடி வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.1200 கோடி தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2000 கோடி வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.1200 கோடி தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடியிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com