தில்லி: மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவர்

தில்லியின் தக்‌ஷின்புரி பகுதியில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தில்லி: மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவர்
Published on
Updated on
1 min read

தில்லியின் தக்‌ஷின்புரி பகுதியில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: “ இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 25) அரங்கேறியுள்ளது. கணவர்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாகவே பிரச்னை இருந்து வருகிறது. கணவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால் மனைவி கணவரின் இந்த குடிப்பழக்கம் குறித்து பலமுறை கண்டித்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 25) இருவருக்கும் இடையேயான இந்த வாக்குவாதம் அதிகரித்ததில் கணவர் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து மனைவி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தான் கத்தியால் குத்தப்பட்டதை தெரிவித்தார். அதன்பின் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், கத்தியால் குத்தப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல் துறையின் விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் கணவரின் பெயர் பாபி என்பதும் இவர்களுக்குத் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனதும் தெரிய வந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் பாபி மெத்தை சரி செய்பவராக வேலை செய்து வருகிறார். கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவி கணவரைப் பிரிந்து தனியாக கடந்த 2 மாதங்கள் வசித்து வந்துள்ளார். நேற்று தனது குழந்தைகளை சந்திக்க அவர் வந்துள்ளார். அப்போது அவருடைய கணவர் குடி போதையில் இருந்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட குடிபோதையில் இருந்த அவர் மனைவியினை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.”  எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com