/

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: நிர்மலா சீதாராமன் பதில்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:19 pm IST

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இலவசமாக இருந்தால் தான் அதிக மக்கள் பயன்படுத்த முன்வருவார்கள்.

எனவே, கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல. திறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறந்த அணுகலை செயல்படுத்தக்கூடிய தளங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.