பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சோனாலி போகாட் மரணம்: கைதான முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு 10 நாள்கள் போலீஸ் காவல்

சோனாலி போகாட் மரண வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் 2 பேரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 11:13 am

DIN

சோனாலி போகாட் மரண வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் 2 பேரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோருடன் ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகாட் (42) கடந்த 22-ஆம் தேதி கோவா வந்திருந்தாா். வடக்கு கோவாவில் உள்ள ஹோட்டலில் அவா் தங்கியிருந்தாா். அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி அதிகாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டாா் என்று தெரிவித்தனா். அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும், சோனாலி போகாட்டின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, போகாட்டுடன் வந்திருந்த சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். 

இந்நிலையில், சோனாலி போகாட்டுக்கு குடிநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக அவா்கள் இருவரும் ஒப்புக் கொண்டதாக கோவா காவல் துறை ஐ.ஜி. ஓம்வீா் சிங் பிஸ்னோய் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதனிடையே இவ்வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இத்துடன் இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை காவல்துறையினர் கோவா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.