புதுதில்லி: நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்து திட்டம் வகுப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் மாற்றத்திற்கான சுகாதார அறிவியல் மற்றும் நிறுவனம் தில்லியில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்த திட்டத்தை வகுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மேம்பட்ட மற்றும் தடுப்பூசியின் வளர்ச்சிக்கு சமமான அணுகலையும் அணுகபமுறையையும் வழங்குவதற்கு ஒத்துழைப்பும், உலகளாவிய ஒன்றுபட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளும், நியாயமான பொது சுகாதார கொள்கையும் அவசியம் என்று சௌமியா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.