புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்து திட்டம் வகுப்பது அவசியம்: சௌமியா சுவாமிநாதன்

நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்து திட்டம் வகுப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தினார். 

News image

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

Updated On :8 டிசம்பர் 2022, 6:09 am

DIN


புதுதில்லி: நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்து திட்டம் வகுப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தினார். 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் மாற்றத்திற்கான சுகாதார அறிவியல் மற்றும் நிறுவனம் தில்லியில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்த திட்டத்தை வகுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மேம்பட்ட மற்றும் தடுப்பூசியின் வளர்ச்சிக்கு சமமான அணுகலையும் அணுகபமுறையையும் வழங்குவதற்கு ஒத்துழைப்பும், உலகளாவிய ஒன்றுபட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளும், நியாயமான பொது சுகாதார கொள்கையும் அவசியம் என்று சௌமியா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.