கர்நாடகத்தில் தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் புர்கா அணிந்து மாணவர்கள் மேடையில் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி புர்கா அணிந்து நடனமாடிய இளைஞர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்கள் சிலர், புர்கா அணிந்தவாறு பாலிவுட் சினிமா திடைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
Some students found dancing in Burqa at Mangaluru engineering college in Karnataka, incident triggers controversy. pic.twitter.com/P8uIhOrVkO
â Nakshab (@your_nakshab) December 8, 2022
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலானது. இதற்கு ஒருசிலர் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், மாணவர்களின் நடவடிக்கையை கண்டித்து கல்லூரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு, தங்களின் நிர்வாகத்தின் சுட்டுரையிலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இறையாண்மையை புண்படுத்தும் வகையிலான மாணவர்களின் செயலுக்கு கல்லூரி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. புர்கா அணிந்து நடனமாடியவர்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத உணர்வுகளுக்கு எதிரான செயல்களை கல்லூரி நிர்வாகம் ஊக்குவிப்பதில்லை என கல்லூரி முதல்வர் மருத்துவர். சுதீர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







