முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி.யில் 16 நகரங்களில் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

உத்தரப் பிரதேசத்தில் 16 நகரங்களில் 5000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

News image
உ.பி.யில் 16 நகரங்களில் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!
Updated On :14 டிசம்பர் 2022, 12:36 pm

DIN

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் 16 நகரங்களில் 5000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி, பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களின் கீழ் 16 நகரங்களில் 5000 சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. 

இந்த சிசிடிவியான சாலையின் ஒவ்வொரு சந்திப்பு, முக்கியச் சாலைகள், விரைவுச் சாலைகள், ரயில்வே மற்றும் மெட்ரோ நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் இலக்கை அடைய இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் யோகி கூறுகையில், 

நமது நகரங்கள் இப்போது பாதுகாப்பாக மாறி வருகின்றன. நம் சகோதரிகள் மற்றும் மகள்களை ஒரு சந்திப்பில் துன்புறுத்தி, மற்றொரு சந்திப்பில் கொள்ளையடிக்கும் குற்றவாளிகளை  காவல்துறையினர் மூலம் உடனே  பிடிபடுவர். 

இத்திட்டம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தொடங்கியுள்ளது. இது, கான்பூர், லக்னோ, ஆக்ரா, வாராணசி, பிரயாக்ராஜ், அலிகார், பரேலி, ஜான்சி, சஹாரன்பூர் மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட நகரங்களில் சிசிடிவிகளை நிறுவ மத்திய அரசு உதவியுள்ளது. மேலும், அயோத்தி, மதுரா-பிருந்தாவன், ஃபிரோசாபாத், மீரட், ஷாஜஹான்பூர், கோரக்பூர் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு மாநில அரசால் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தின் கீழ், நகர்ப்புற வளர்ச்சித்துறை கேமராவை நிறுவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. விரைவு நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில், ரயில் நிலையங்களில், ரயில்வே மற்றும் மெட்ரோ நிர்வாகத்தால் சிசிடிவிக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.