
நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்டவர்கள், அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசு அறிக்கையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.