தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சோகத்தில் முடிந்த கால்பந்து உலகக்கோப்பை கொண்டாட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :19 டிசம்பர் 2022, 7:47 pm IST

உலகக்கோப்பை கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் வைத்திருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில், குண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. எனினும் இறந்த பெண்ணின் வீட்டின் சுவர்களில் இரண்டு குண்டுகள் வெடித்து சிதறிய தடங்களைக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி உலகக் கோப்பையை வென்றது.

உலகம் முழுவதுமுள்ள ஆர்ஜென்டீனா அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடினர். அந்தவகையில் மணிப்பூர் மாநிலத்தின் கிழக்கு இம்பால் பகுதியில் உலகக்கோப்பை வெற்றியை மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தும் வீதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது துப்பாக்கி குண்டு பட்டதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், இது குறித்து பேசிய மணிப்பூர் காவல் துறையினர், உயிரிழந்த பெண்ணின் வீட்டு சுவரில் இரண்டு குண்டுகள் பதிந்த தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு குண்டு பெண்ணின் உடலில் பாய்ந்துள்ளது. தடவியல் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.  

இந்நிலையில், குற்றவாளிகள் யார் என்பது குறித்து தெரியவரும் வரை, இறுதி சடங்குகளை நடத்தப்போவதில்லை என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.