‘ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்’: கார்கேவை விமர்சித்த மத்திய அமைச்சர்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா சுதந்திரம் பெற்றதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த பிரச்னையை இன்று மாநிலங்களவையில் முன்வைத்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரகலாத் ஜோஷி பேசுகையில்,
ராஜஸ்தானில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று செயல்பட்டு வருவது இத்தாலி காங்கிரஸ். தற்போது இருப்பது ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்.
அவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பொது அறிவு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், அது அவருக்கு இல்லை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...