பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சீன எல்லை விவகாரம்: நாடாளுமன்ற வளாக மகாத்மா காந்தி சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம்!

இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம்

News image
Updated On :21 டிசம்பர் 2022, 5:16 am

DIN

புதுதில்லி: இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி சிலை முன் காலை 10:15 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் சுமார் 12 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 7- ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் மற்றும் சமீபத்திய சீன அத்துமீறல்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.