தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிகாரில் தினமும் 50ஆயிரம் கரோனா பரிசோதனைகள்: முதல்வர் நிதீஷ்குமார்

பிகாரில் தினமும் 50ஆயிரம் வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2022, 12:09 pm

DIN

பிகாரில் தினமும் 50ஆயிரம் வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் கரோனா பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குகிறோம். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 45,000-50,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பிகார் விழிப்புடன் உள்ளது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் மத்திய அரசு அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகளின் இருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது. 

மேலும் எந்த சவாலையும் எதிா்கொள்ளும் தயாா்நிலையுடன் மாநிலங்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.