கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரதமரின் தாயார் விரைந்து குணமடைய கோயில்களில் பிரார்த்தனை

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி விரைவில் நலம் பெற வேண்டி உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2022, 12:57 pm

DIN

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி விரைவில் நலம் பெற வேண்டி உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 29) அனுமதிக்கப்பட்டார். 

மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு வயது 100. இவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மோடியின் தாயார் விரைந்த நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் பிரதமரின் தாயார் நலம் பெற வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.

ஓம்காரஸ்வரர் கோயில், உக்கிமத் கோயில், நிரிசிங் கோயில் உள்ளிட்ட உத்தரகண்டின் பல கோயில்களிலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத்-கேதர்நாத் கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதாக கோயில் குழுவின் தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.