மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விரைவில் வருகிறது ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: யாருக்காகத் தெரியுமா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ஒரு முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 டிசம்பர் 2022, 12:22 pm

DIN

புது தில்லி: மாநிலத்துக்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று கூலி வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ஒரு முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல தொகுதிகளை உள்ளடக்கிய மின்னணு முன்மாதிரி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒரேயொரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் 72 தொகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் சற்று மேம்படுத்தப்பட்ட பல்லோட் இயந்திரம் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்களை அளிக்க ஜனவரி 16ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.4 சதவீத மக்கள்தான் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 30 கோடி பேர் தங்களது வாக்குகளைச் செலுத்தவில்லை. இதனால் கவலை அடைந்த தேர்தல் ஆணையம், வாக்களிப்பை அதிகரிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, பல வாக்காளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் போகிறது.எனவே, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்க வசதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதே ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

நாடு முழுவதும் எத்தனை பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து புள்ளிவிவரங்கள் இல்லை. எனவே, வாக்களிப்பை அதிகரிக்க இந்த முன்னெடுப்பை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.