எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பெங்களூரு: நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், ஆண்டுக்கு 100 நாள்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தோ - திபெத் காவல்துறைக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும், பல திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துப் பேசிய அமித் ஷா இவ்வாறு கூறினார்.
இதையும் படிக்க.. கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது; கடைசியாக கொண்டாடும் நாடு எது?
எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் 100 நாள்கள் அவர்களது குடும்பத்துடன் தங்கியிருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இந்த பரிந்துரையை நிறைவேற்றுவது தொடர்பான பணிகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும். எல்லைப் பாதுகாப்புப் பணி என்பது மிகவும் சவாலானது. என்னால் அதனை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அமித் ஷா கூறினார்.