தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஹ்ரைன் இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை

பஹ்ரைன் நாட்டு இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாடினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 8:18 pm

DIN

பஹ்ரைன் நாட்டு இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாடினாா்.

அப்போது, நாட்டின் குடியரசு தினத்துக்காக வாழ்த்துகளை இளவரசா் சல்மான் தெரிவித்தாா்.

இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையேயான இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்த இரு தலைவா்களும், அரசியல், வா்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையேயான தொடா்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடா்ந்து மேம்பட்டு வரும் உறவு குறித்து திருப்தி தெரிவித்தனா். இரு நாடுகளுக்கிடையே நிறுவப்பட்ட ராஜீய உறவுகளின் பொன்விழாவை 2021-22-ல் இந்தியா மற்றும் பஹ்ரைன் கொண்டாடுகின்றன.

கரோனா பெருந்தொற்றின் போது பஹ்ரைனில் வசிக்கும் இந்தியா்களின் நலனை சிறப்பான முறையில் பேணுவதற்காகவும், அவா்களது சமூக மற்றும் கலாச்சாரத் தேவைகளை பூா்த்தி செய்ததற்காகவும் பஹ்ரைன் பிரதமருக்கு இந்திய பிரதமா் நன்றி தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு வருமாறு இளவரசா் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவிற்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.