திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேர்தல் என்றால் தாடியை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் தோன்றும் மோடி: தெலங்கானா முதல்வர்

பிரதமர் மோடி அணியும் உடைகளை நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார்.

News image
மோடி (கோப்புப்படம்)
Updated On :2 பிப்ரவரி 2022, 9:59 am

DIN

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், நடுத்தர, ஏழை மக்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி அணியும் உடைகளை நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார். தேர்கலுக்காக அவர் அணியும் உடைகளும் நிதிநிலை அறிக்கையும் கவர்ச்சியாக இருந்தாலும் அதில் சாரம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். 

அடுத்த மூன்றே நாள்களில், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் மோடியும் சந்திரசேகர ராவும் கலந்து கொள்கின்றனர். இருப்பினும், தனது விமரிசனங்களை நேரில் கூற பின்வாங்க மாட்டேன் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், சந்திரசேகர ராவ் பாஜகவின் 'பி' என்றே விமர்சிக்கப்பட்டுவந்துள்ளார். அதற்கு ஏற்றார்போல், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு அவரின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதற்கு மத்தியில் பேசிய சந்திரசேகர் ராவ், "சமூக ஊடக நிர்வாகத்தின் மூலம், அப்பட்டமாக பொய்களை கூறி, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, இதுவரை மக்களை முட்டாளாக்க முடிந்தது. ஆனால் தற்போது அவை அம்பலமாகியுள்ளன. அவர்கள் வெறுப்பு மற்றும் பிரிவினையின் வகுப்புவாத அரசியலை விளையாடுகிறார்கள். 

தேர்தல் நேரம் என்றால் தாடியை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் தோன்ற வேண்டும். தமிழகம் என்றால் லுங்கி அணிய வேண்டும். என்னதான் நடக்கிறது? இந்த மாதிரியான வித்தைகளால் நாட்டுக்கு என்ன கிடைக்கும்? பஞ்சாப் தேர்தல் என்றால் தலைப்பாகை அணிவார். மணிப்பூரில் மணிப்பூரி தொப்பி உத்தரகாண்டில் இன்னொரு தொப்பி அணிவார். இப்படி எத்தனை தொப்பிகள்?" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.